Sunday, June 27, 2010

தூக்கம் என்ற ஒத்திகை

பள்ளி நாட்களில் நான் இரவு சாப்பிடும் போதே உட்கார்ந்து கொண்டே தூங்கி விடுவேன். சில சமயம் ஹாலில் எங்காவது தூங்கிக் கொண்டிருக்கும் என்னை என் அப்பா படுக்கை விரித்து அப்படியே நகர்த்தி விடுவார். காலையில் எழுந்தால் இரவு சாப்பிட்டேனா என்று பல முறை யோசித்ததுண்டு. அம்மா, பாட்டியிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வேன்.

கல்லூரி நாட்களிலும் நான் அதிகம் கண் விழித்ததில்லை. நான் தினமும் கல்லூரி (110 கிமீ போக வர) சென்று வந்தது ஒரு காரணம் மற்றும் அப்பொழுது இணையம், தொலைக்காட்சி நிக்ழ்ச்சிகள் இல்லாதது இன்னொரு காரணம். பரீட்சை நாட்களில் கூட அதிகம் போனால் 11 மணி வரைக்கும் தான் விழித்திருப்பேன்.அதுவும் 9 மணியில் இருந்து பல தடவை சாமியாடி அப்பா, "இதுக்கு பேசாம படு" என்று சொல்லிய பிறகு.நான் பல தடவை சொல்லியும் எனது சக மாணவர்கள் நம்பியதில்லை.

எந்த சூழ்நிலையிலும் (ஒலி, ஒளி) எனது தூக்கம் கெட்டதில்லை.இது பெருமையா என்று எனக்கு தெரியவில்லை. அதிகாலையில் தான் என்னை சுற்றி நடப்பவைகளைப் பற்றிய ஒரு பிரக்ஞை ஏற்படும். நடு ராத்திரியில் வீட்டுக்கு யாராவது வந்தால் விடிகாலை வரை வீட்டுக்கு காவல் நிற்க வேண்டியது தான். என் அம்மா, பாட்டி ஏதாவது கோவில் விழாக்களுக்கு சென்றால் வெளியில் பூட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். நான் தான் இப்படி என்றால் என் நண்பன் ஸ்ரீகாந்த் எனக்கும் மேல். அவனை விடிகாலையிலும் எழுப்ப முடியாது :)

இதில் யாராவது இரவு சரியாக தூங்கவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.இதுவும் ஒரு வரமோ என்னவோ? கடவுளுக்கு நன்றி!

- NSR.

Friday, June 25, 2010

ஒரே தெய்வம்

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகான் - பல்
ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம்,
உண்டாம் எனக் கேளீரோ.
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் - எதனூடு
நின்றோங்கும் அறிவு ஒன்றே தெய்வம்
ஓதி அறியீரோ.
சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை யழிவீரோ.
வேடம் பல்கோடி ஒரு உண்மைக்குள் உள்ளது
என்று வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீர் உண்மை என்று கொள்வதை
வேதம் அறியாதே.
நாமம் பலகோடி ஒரு உண்மைக்குள் உள்ளது.
என்று நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மை என்று கொள்வதை
நான்மறை கண்டிலதே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகள் எல்லாம் - நீவிர்
அவலை நினைத்து உமி மெல்லுதல் போல்
இங்கவங்கள் புரிவீரோ!
உள்ளது அனைத்திலும் உள் ஒளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்
கொள்ளற்கரிய பிரமம் ஒன்றே மறை
கூவுதல் கேளீரோ!
மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ!
ஒன்று பிரமம் உளது உண்மை - அது உன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அது உன்
உணர்வெனக் கொள்வாயே.

- பாரதி

Thursday, June 24, 2010

Saina

Congratulations, Saina for becoming world no.3 in badminton.



- NSR.

Longest match


இவங்க (John Isner and Nicolas Mahut) எல்லாம் மனிதப்பிறவியே இல்லை. ஃபர்ஸ்ட் ரவுண்ட் மேட்சே 9 மணி நேரமா விளையாடறாங்க. இன்னும் முடியலே! அந்த 5வது செட் ஸ்கோரைப் பற்றி ஒரு சின்ன நோட் அந்த படத்து மேலேயே இருக்கு. கண்டிப்பா பாருங்க.

Update: Finally it's over.



Image courtesy: Wimbledon

- NSR.

Monday, June 21, 2010

Waka Waka



- NSR.