Showing posts with label Miscellaneous. Show all posts
Showing posts with label Miscellaneous. Show all posts

Wednesday, September 01, 2010

Sunday, June 27, 2010

தூக்கம் என்ற ஒத்திகை

பள்ளி நாட்களில் நான் இரவு சாப்பிடும் போதே உட்கார்ந்து கொண்டே தூங்கி விடுவேன். சில சமயம் ஹாலில் எங்காவது தூங்கிக் கொண்டிருக்கும் என்னை என் அப்பா படுக்கை விரித்து அப்படியே நகர்த்தி விடுவார். காலையில் எழுந்தால் இரவு சாப்பிட்டேனா என்று பல முறை யோசித்ததுண்டு. அம்மா, பாட்டியிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வேன்.

கல்லூரி நாட்களிலும் நான் அதிகம் கண் விழித்ததில்லை. நான் தினமும் கல்லூரி (110 கிமீ போக வர) சென்று வந்தது ஒரு காரணம் மற்றும் அப்பொழுது இணையம், தொலைக்காட்சி நிக்ழ்ச்சிகள் இல்லாதது இன்னொரு காரணம். பரீட்சை நாட்களில் கூட அதிகம் போனால் 11 மணி வரைக்கும் தான் விழித்திருப்பேன்.அதுவும் 9 மணியில் இருந்து பல தடவை சாமியாடி அப்பா, "இதுக்கு பேசாம படு" என்று சொல்லிய பிறகு.நான் பல தடவை சொல்லியும் எனது சக மாணவர்கள் நம்பியதில்லை.

எந்த சூழ்நிலையிலும் (ஒலி, ஒளி) எனது தூக்கம் கெட்டதில்லை.இது பெருமையா என்று எனக்கு தெரியவில்லை. அதிகாலையில் தான் என்னை சுற்றி நடப்பவைகளைப் பற்றிய ஒரு பிரக்ஞை ஏற்படும். நடு ராத்திரியில் வீட்டுக்கு யாராவது வந்தால் விடிகாலை வரை வீட்டுக்கு காவல் நிற்க வேண்டியது தான். என் அம்மா, பாட்டி ஏதாவது கோவில் விழாக்களுக்கு சென்றால் வெளியில் பூட்டிக் கொண்டு சென்று விடுவார்கள். நான் தான் இப்படி என்றால் என் நண்பன் ஸ்ரீகாந்த் எனக்கும் மேல். அவனை விடிகாலையிலும் எழுப்ப முடியாது :)

இதில் யாராவது இரவு சரியாக தூங்கவில்லை என்றால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.இதுவும் ஒரு வரமோ என்னவோ? கடவுளுக்கு நன்றி!

- NSR.

Friday, February 12, 2010

ப்ளாஷ்பேக்

புத்தகங்களை வாசிக்க எனக்கு அலுப்பு ஏற்பட்டதில்லை.நான் புத்தகம் வாசிக்க ஒரு முக்கிய காரணம் எனது சித்தப்பா. எனது பள்ளிப்பருவத்தில் அதிலும் 5-ம் வகுப்புக்கு முன்னரே அவர் எனக்கு பல புத்தகங்களை வாங்கித் தந்தார். அப்பொழுது நாங்கள் திருப்பூரில் இருந்தோம். எனது பள்ளியில் ஒரு எக்ஸிபிஷன் போடுவார்கள். அதில் நிறைய ரஷ்ய சிறுக்கதைகள் (ஆங்கிலத்திலும், தமிழிலும்) இருக்கும். அவற்றை வாங்கி தருவார். அது மட்டுமன்றி அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம், ராணி காமிக்ஸ், பிக்விக் போன்றவைகளும் வாங்கி வருவார்.மற்ற பெரியவர்கள் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ள மாட்டார். படித்தால் போதும் என்று நினைப்பவர். புத்தகங்கள் வாங்க நான் செலவழிக்க தயங்காததற்கு காரணம் இவரும் என்று சொல்லலாம்.

விக்ராமதித்தன் கதைகள், பஞ்சத்தந்திரக் கதைகள், மதனகாமராஜன் கதைகள், சிந்துபாத் மற்றும் இன்னப்பிற புத்தகங்களை வாசித்தது அந்த வயதில் தான். புத்தகங்களின் அளவு சாதாரணமாகி போனது. எதையும் தேவைப்பட்டால் வாசிக்க தயக்கம், பயம் இல்லாமல் போனது. இவை ஏற்பட காரணம் அப்போதைய வாசிப்பு தான். எனக்கு தெரிந்து கோகுலம், அம்புலிமாமா இன்னும் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், அம்புலிமாமா இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றது. சுட்டி கீழே.

http://www.chandamama.com/lang/story/stories.php?lng=TAM&mId=12&cId=43&stId=1440

- NSR.

Saturday, January 30, 2010

Streets

As usual one more good writing from Paulo Coelho.

http://www.warriorofthelight.com/engl/edi216_pelas.shtml

After reading this, you won't stop thinking about the streets of India (especially in big cities) and smile to yourself.

- NSR.

Saturday, September 19, 2009

தென்கச்சியாருக்கு ஒரு அஞ்சலி

ரேடியோவில் "இன்று ஒரு தகவல்" மூலமாக பரவலான ரசிகர் கூட்டத்தைப் பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது அஞ்சலி.அவரது குடும்பத்தார் இந்த பிரிவிலிருந்து விடுபட இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.



இவரது எளிமையான கருத்தாழமிக்க பேச்சு, எழுத்து என்னைக் கவர்ந்த ஒன்று.பகிர்ந்தமைக்கு நன்றி.

Friday, July 24, 2009

Twins

Thala got French open and Wimbledon this year..Vaazhthukkal!!
http://www.rogerfederer.com/en/rogers/news/newsdetail.cfm?uNewsID=939

- NSR.